சினிமாவை மிஞ்சிய கொடூர சம்பவம்!!

 


காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்ப உறுப்பினர்கள் 13 பேரை இளம்பெண் விஷம் வைத்து கொன்ற  பெரும் அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று பாகிஸ்தானில் அரங்கேறியுள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கைபத்கான் புரோகி கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி ஒரே நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் , சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 13 பேரும் உயிரிழந்தனர். பிரேத பரிசோதனையில் அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

இதுதொடர்பாக பொலிஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.

அதாவது உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் வாலிபர் ஒருவரை காதலித்து வந்தந் நிலையில் அவரது பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த இளம்பெண், தனது காதலனின் யோசனைபடி இக் கொடூர செயலை  அரங்கேற்றியுள்ளார். அதாவது வீட்டில் ரொட்டி சமைக்க பயன்படுத்தும் கோதுமை மாவில் விஷத்தைக் கலந்துள்ளார்.

இதுதெரியாமல் சம்பவத்தன்று அந்த கோதுமை மாவில் இளம்பெண்ணின் குடும்பத்தினர் ரொட்டி சமைத்து சாப்பிட்டு அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

 பெண்ணை   பொலிசார் கைது செய்த நிலையில் இச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.