மது விருந்தால் பறிபோன உயிர்!!
கண்டி - கெமுனுபுர பிரதேசத்தில் மொர ஓயாவை கடக்க சென்ற நபர் ஒருவரை முதலை ஒன்று பிடித்து இழுத்துச் கொன்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று முன்தினம் (04-10-2024) மாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் கெமுனுபுர - பதவி ஶ்ரீபுர பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உயிரிழந்த நபர், நேற்று முன்தினம் (04) மாலை நண்பர்கள் இருவருடன் மொர ஓயாவை கடந்து ரஞ்சித் மங்கட பகுதியில் மது அருந்தியுள்ளார்.
இதன்போது, வீட்டுக்குச் சென்று இறைச்சி கொண்டு வருவதற்காக மீண்டும் ஆற்றைக் கடந்தபோது, அவரை முதலை பிடித்துச் சென்றது.
நபரின் உடலின் ஒரு பகுதியை முதலை தின்றுவிட்டதை அவதானித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஸ்ரீபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை