அனுர அரசின் அதிரடித் தீர்மானம்!!

 


 

நஷ்டத்தில் இயங்கும் அனைத்து அரசநிறுவனங்களையும் மறுசீரமைப்பு செய்வது குறித்த பொதுத்தேர்தலின் பின்னரே அரசாங்கம் தீர்மானிக்கும் என அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் உட்பட நஷ்டத்தில் இயங்கும் அரசநிறுவனங்களை மறுசீரமைப்பது மற்றும் மத்தல விமானநிலையத்தினை வேறு நிர்வாகத்திடம் கையளிப்பது போன்ற முடிவுகளை பொதுத்தேர்தலின் பின்னரே அரசாங்கம் எடுக்கவுள்ளதாக விடயமறிந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை முன்னைய அரசாங்கம் அரசநிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான பிரிவொன்றை உருவாக்கியிருந்தது.

எனினும் அனுரகுமாரதிசநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் அவர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்தனர்.

இந்நிலையில் அரசநிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான பிரிவினை கைவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறித்த கேள்விக்கு,  அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் பொதுத்தேர்தலின் பின்னரே நஷ்டத்தில் இயங்கும் அரசநிறுவனங்களை மறுசீரமைப்பது குறித்த தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதேசமயம் இலங்கை விமான சேவையான ஸ்ரீலங்கன் எயர்லைன்சினை விற்க மாட்டோம்,என தெரிவித்துள்ள அவர் , அரசாங்கம் புதிதாக நியமித்துள்ள முகாமைத்துவகுழுவுடன் கலந்தாலோசித்த பின்னர் புதிய அபிவிருத்தி திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.