கிளிநொச்சியில் மாணவர்களை ஏற்றாது பயணிக்கும் அரச பேருந்துகள்!!

 


கிளிநொச்சியில் மாணவர்களை ஏற்றாது அரச பேருந்துகள் பயணிக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகின்றதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

இன்றும் அவ்வாறு மாணவர்களை பேருந்துகள் ஏற்றிச் செல்லாத நிலையில், பொலிஸார் தமது வாகனத்தில் மாணவர்களை பாடசாலையில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (14) காலை கிளிநொச்சி - முகமாலை, A-09 வீதி பளைப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

காலையில் மாணவர்கள் நேரத்திற்கே வந்து காத்திருந்தபோது கிளிநொச்சி ஏ.09 வீதியின் இத்தாவில், முகமாலை மற்றும் உமையாள்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களை அரச பேருந்துகள் ஏற்றிச் செல்லாத நிலைமை காணப்படுகிறது.

ஏ -9 வீதியூடாக பல போக்குவரத்து சேவைகள் இடம்பெறுகின்ற போதும் பாடசாலை மாணவர்களுக்கான சேவையை வழங்குவதில் பேருந்து சாரதிகள் நடத்துநர்கள் சரியாக செயல்படவில்லை என மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.

வீதியில் நின்று மாணவர்கள் பேருந்தை மறிக்கும் போது அரச மற்றும் தனியார் பேருந்துகள் மாணவர்களை ஏற்றி செய்வதில்லை.

இதன் காரணமாக பாடசாலைக்கு உரிய நேரத்திற்கு செல்லவோ, வீடு திரும்பவோ முடியாது மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலருக்கு தெரியப்படுத்தியும் இதுவரை தீர்க்கப்படாத பிரச்சினையாகவே இது காணப்படுகிறது எனவும் பிள்ளைகளின் பெற்றோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.