சுவரொட்டி ஒட்டியவருக்கு நேர்ந்த துயரம்!


முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் கட்சி ஒன்றின் தேர்தல் பரப்புரை சுவரொட்டி ஒட்டும் போது நபரொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் நேற்று (24) இரவு பதிவாகியுள்ளது.

முத்துவிநாயகபுரம் முத்துஐயன்கட்டு ஒட்டுசுட்டானை சேர்ந்த 45 அகவையுடைய காசிலிங்கம் லங்காதீபன் என்பவே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

முத்துவிநாயகபுரம் முத்துஐயன்கட்டு பகுதியில் கட்சி ஒன்றிற்கான தேர்தல் சுவரொட்டியை இரவு 11.00 மணியளவில் ஒட்ட முற்பட்டவரே உயிரிழந்துள்ளார். யானைக்காக காணி வேலியில் இணைக்கப்பட்ட மின்சார இணைப்பில் இருந்து பாய்ந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

தகரம் அடித்த குறித்த காணி வேலிக்கு முன்னால் காணி உரிமையாளரால் யானையில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மின்சார இணைப்பு போடப்பட்டிருந்தது.

வேலி தகரத்தில் சுவரொட்டி ஒட்ட முற்பபட்ட போது மின்சாரத்தில் சிக்குண்ட குறித்த நபர் உயிரிழந்துள்ளார் உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் ஒட்டுசுடுட்டான் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இந்நிலையில் காணியின் உரிமையாளர் அனுமதிபெற்று யானைவேலி அமைத்தாரா ,என்பது தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.