தாய் மகளுக்கு நேரவிருந்த அசம்பாவிதம்!!
தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த இளம் தாயையும் மூன்று வயது மகளையும் ரயில் சாரதி காப்பாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (10) காலை அவிசாவளை ஹிகுரல மற்றும் மிரிஸ்வத்த ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.
இளம் தாயொருவர் தனது மூன்று வயது மகளுடன் களனி ரயில் மார்க்கத்தில் தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.
இதன்போது, அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த ரயிலின் சாரதி தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த இளம் தாயையும் மகளையும் அவதானித்துள்ளார்.
இதனை அடுத்து வேகக் கட்டுப்பாட்டின் கீழ் பயணித்த ரயிலை உடனே நிறுத்தி இளம் தாயையும் மகளையும் சாரதி காப்பாற்றியுள்ளார்.
தாயும் மகளும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை