மாவீரர்வாரம்.!!
மண்ணுக்குள்ளே கண்ணை மூடி தூங்குகின்றவர் -இன
மானம் பெரிதானதென்று சொல்லுகின்றவர்
கண்ணுக்குள்ளே வந்து கன வாகி நிற்பவர்- வெல்லும்
காலம் வரை எங்களுக்கு காவல் நிற்பவர்
பூ எடுத்து போடு அந்த பாடலினை பாடு
பூ எடுத்து போடு அந்த பாடலினை பாடு - காவியத்து
நாயகர்கள் கல்லறைகள் மீது
மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும்
மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும்
கல்லறைகள் விடுதலை கருவறைகள் - நாங்கள்
கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள்
வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும்
செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும்..
#மாவீரர்வாரம் 🔥
கருத்துகள் இல்லை