தேர்தலில் போட்டியிட்ட யாழ்ப்பாண வேட்பாளர் காலமானார்!
ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளரும், பிரபல தொழிலதிபருமான அழகசுந்தரம் கிருபாகரன் (வயது 43) மரணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடல் நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் (19-11-2024) மாலை உயிரிழந்துள்ளார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளராக அழகசுந்தரம் கிருபாகரன் போட்டியிட்டுள்ளார்.
தேர்தல் பிரச்சார காலங்களில் அவர் திடீர் சுகவீனம் அடைந்து சுயநினைவற்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்றைய தினம் மாலை உயிரிழந்துள்ளார.
அவர் ஒரு தொழிலதிபராக இருந்துவந்த நிலையில் பல வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளையும், வேறு பல உதவிகளையும் வழங்கி அவர்களது குடும்ப வறுமையை போக்கி பல சேவைகளை புரிந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை