சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்!!

 


யாழ்ப்பாணம் - மயிலங்காடு பகுதியில் தோட்டக்கிணற்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரது சடலம் நேற்று திங்கட்கிழமை (11) மீட்கப்பட்டுள்ளது. மயிலங்காடு, ஏழாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், உயிரிழந்தவர் கடந்த சனிக்கிழமை வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றிருந்த நிலையில் இரண்டு தினங்களாக அவரை காணாத உறவினர்கள் தேடுதலில் ஈடுபட்டு வந்தனர்.

இதனையடுத்து அவரது சடலம் நேற்று தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

அவர் மது போதையில் கிணற்று கட்டினில் உறங்கிய வேளை அவர் கிணற்றினுள் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.