இலங்கையில் இணையவழி குற்றங்கள் அதிகரிப்பு!!

 


இலங்கையில் இணையவழி குற்றச் செயல்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக  கணினி அவசர தயார் நிலைக் குழுவின் அதிகாரி சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 2,000 இணைய அச்சுறுத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளது.

சமீபத்திய மாதங்களில் இணையவழி குற்றச் செயல்கள் தொடர்பில் 9,500 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் 981 முறைப்பாடுகள் பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தப்பட்டவை என்பதுடன், இணையவழி பாதுகாப்பு முறைமையே இதற்கு காரணம்.

இணையவழி அச்சுறுத்தல்கள் தவிர, இணைய மோசடிகள் சம்பந்தப்பட்ட கிட்டத்தட்ட 1,600 சம்பவங்கள் சமீப காலங்களில் பதிவாகியுள்ளன.

இணையவழி குற்றச் செயல்களின் அதிகரிப்பு, டிஜிட்டல் துன்புறுத்தலைச் சமாளிக்கவும், இணையவழி பயனர்களைப் பாதுகாக்கவும் வலுவான நடவடிக்கைகளின் அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்நிலையில் இலங்கையில் இணையவழி பாதுகாப்பிற்காக, அதிக விழிப்புணர்வு பிரச்சாரங்களுடன் மேலும் வலுவான சட்டங்கள் அவசியமென நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.