இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்கவேண்டும்!!

 


இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் என இந்தியாவின் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.


எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுர கூறியுள்ளமை தொடர்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் சீமான் செய்தியாளர்களிடம் கூறியது,


இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன் பிடிக்கின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என  இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க கூறியுள்ளார்.


தமிழர்களை சுட்டு கொன்றார்கள், வலைகளை கிழித்து எறிந்தார்கள், இதற்கு மேல் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள். இதற்கு மேல் என்ன நடவடிக்கை உள்ளது.


இந்திய பெருங்கடல் என்றால் போதுமா? மீன் பிடிப்பதற்கு உரிமை இல்லையா?. இலங்கையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும்  என சீமான் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.