கொட்டும் மழையிலும் மன்னார் வைத்தியசாலை முன் குவிந்த மக்கள்!

 


மன்னார் பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இளம் தாய் மற்றும் சிசு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.


தாய் மற்றும் சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக மாலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்றையதினம் (20-11-2024) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


குறித்த போராட்டத்தின் போது, தாயின் மரணத்துக்கு நீதி வழங்கவேண்டும், தவறு செய்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும், வைத்தியசாலை நிர்வாகம் மாற்றப்படவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டுள்ளது.


போராட்டத்தின் போது பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்குள் போராட்டகாரர்கள் நுழைய முற்பட்ட நிலையில் கலவரம் ஏற்பட்டுள்ளது.


இதைத்தொடர்ந்து பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கலகம் அடக்கும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டனர்.


இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாவட்ட செயலாளர் தலைமையிலான குழுவினர் இறந்த பெண்ணின் பெற்றோரிடம் கலந்துரையாடிய போதும் சுமூகமான நிலை ஏற்படவில்லை.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.