ஹேர் ஸ்டைலால் இடம்பெற்ற கொலை!!
பென்சில்வேனியாவில் நபர் ஒருவரின் காதலி தனக்கு பிடிக்காத வகையில் தலைமுடியை வெட்டியதால் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்வம் தொடர்பில் பொலிஸார் குறிப்பிடுகையில்,
49 வயதான நபரே இவ்வாறு கொலை செய்துள்ளார். அதனை தடுக்க முயன்ற அண்ணனையும் கத்தியால் குத்தியுள்ளார்.
சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்ற பொலிசார், கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் இருந்த நபரை கைது செய்துள்ளனர்.
பின்னர் இறந்து கிடந்த காதலியையும் காயமடைந்த அண்ணனையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து அவர்களது மகள் குறித்த புகாரில், ஒருநாள் முன்னர் 50 வயதான கார்மென் மார்டினெஸ்-சில்வா முடி திருத்தம் செய்துள்ளார்.
அந்த புதிய ஹேர் ஸ்டைலுடன் அவர் வீடு திரும்பினார். வீட்டில் இருந்த அவரது காதலனுக்கு இந்த ஹேர் ஸ்டைல் பிடிக்கவில்லை.
இதனால் காதலி பயந்து, தன் மகளின் வீட்டில் இரவைக் கழிக்க முடிவு செய்தாள்.
ஆனால் தனது காதலனால் மிகவும் பயத்துடன் இருந்த அவர், தனது மகளின் வீட்டை விட்டு தனது சகோதரனின் வீட்டிற்குச் சென்று, தங்கள் உறவு முடிந்துவிட்டதை குறித்த நபரிடன் சொல்லுமாறு ஒரு நண்பரிடம் கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், அவளைத் தேடி அண்ணன் வீட்டுக்குச் சென்றார். முதலில் அவள் இல்லை என்று பொய் சொல்லி அண்ணன் திருப்பி அனுப்பி வைத்தார்.
அந்த நபர் திரும்பி வந்து காதலியின் அண்ணனை கத்தியால் தாக்கியதை கண்ட காதலி தடுக்க முயற்சித்தார். அப்போது அவரை சராமாறியாக தாக்கி கொலை செய்துள்ளார் என புகாரில் தெரிவிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை