வீட்டுக்குள் நுழைந்து கொடூரம்!!

 


காலி, தடல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த முகமூடி அணிந்திருந்த நபரொருவர், வீட்டிலிருந்த தந்தையைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதுடன் தாயையும் மகளையும் காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (15) அதிகாலை இடம்பெற்றுள்ளது.


47 வயதுடைய தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். காயமடைந்த 45 வயதுடைய தாயும் 15 வயதுடைய மகளும் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.