நாட்டின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்ந்த பிரதமர்!!

 


தொழில்நுட்ப அமைச்சின் கீழ் காணப்படும் பிரதான அரச நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவையை வழங்கும் அரச நிறுவனங்களின் முன்னேற்றம் தொடர்பில் குறித்த நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பிரதமர் ஹரினி அமரசூரிய சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.


அமைச்சிற்குள் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டின் முக்கியத்துவம் தொடர்பில் பிரதமர் இதன்போது கவனம் செலுத்தியதுடன்,


இலங்கையின்  அபிவிருத்தியை கட்டியெழுப்புவதற்கென தகவல் தொழில்நுட்ப சேவையில் காணப்படும் முன்னேற்றம் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது.


புதிய அரசாங்கத்தின் டிஜிட்டல் மயப்படுத்தல் முயற்சிகள் மற்றும் அரச சேவையை நவீன தொழில்நுட்பத்துடன் முன்னெடுக்கும் போது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதற்கு காணப்படும் சாத்தியங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் அபிவிருத்தியில் காணப்படும் தற்போதைய சவால்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டிருந்தது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.