வைரலாகும் ஐஸ்வர்யாராய் குறித்த வீடியோ!!

 


 “எந்த காதலனும் விரும்பும் விஷயம் அது தான்..” என சல்மான் கான் பேசிய காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


பாலிவுட் பிரபலங்களான அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் தம்பதிகள் கடந்த 2007ம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.


ஐஸ்வர்யா ராய் தன்னுடைய 3 வயது சிறியவரான அபிஷேக் பச்சனை திருமணம் செய்யும் முன்னர் சல்மான் கான், விவேக் ஓபராய் ஆகியோரை காதலித்து வந்தார்.



இவர்களுடான உறவை முறித்து கொண்டு திருமணம் செய்து கொண்டர். தற்போது இவர்களுக்கு அழகிய மகள் ஒருவரும் இருக்கிறார். ஆனாலும் இருவரும் நடிப்பை விட வில்லை.


இந்த நிலையில் சமீபக் காலமாக பொது இடங்களில் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் தனியாக நடமாடுகிறார்கள். இதனால் இருவரும் பிரிந்து விட்டார்களா? என பலரும் பேசி வருகிறார்கள்.


இதனை உறுதிப்படுத்தும் வகையில் அம்பானி வீட்டு திருமணத்திற்கு அபிஷேக் பச்சன் குடும்பமாகவும் ஐஸ்வர்யா ராய் மகளுடனும் சென்றிருந்தனர்.


இதனை பார்த்த மீடியாக்கள் இருவரும் தனித்து வாழ்கிறார்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இப்படியொரு நிலையில் முதல் முறையாக ஐஸ்வர்யா ராய் குறித்து பேசிய சல்மான் கான், “ நான் என்ன செய்ய முடியும், அவர் இப்போது வேறு ஒருவருடைய மனைவியாக இருக்கிறார், அத்துடன் அவர் பெரிய குடும்பத்திற்கு திருமணம் செய்து சென்று விட்டார். இது போன்ற நேரங்களில் அமைதியாக இருப்பது சிறந்தது.


ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சனை திருமணம் செய்ததது எனக்கு மகிழ்ச்சி, எந்த ஒரு முன்னாள் காதலனும் தன்னுடைய துணை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார். நான் இல்லாமல் அவர் மகிழ்ச்சியாக இருப்பதை பார்ப்பது தான் சிறந்தது. நானும் அப்படித்தான் உணர்கிறேன்'' என பேசியுள்ளார்.


இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.