யாழ். ஆவா குழு தலைவர் கனடாவில் கைது!


யாழ் ஆவா குழு தலைவர் என சந்தேகப்படும் நபர் கனடாவில் கைது செய்யப்பட்டு பிரான்சுக்கு நாடு கடத்தப்படுகிறார். யாழ்ப்பாணத்தில் பல கொலை கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இவர் மன்னார் மூலமாக தமிழ்நாட்டுக்கு தப்பி சென்று பின்னர் பிரான்சுக்கு சென்றிருக்கிறார்.

அங்கே இருவரை கொடூரமாக வெட்டி இருக்கிறார் ஒருவர் கொல்லப்பட இன்னொருவர் உயிர் ஆபத்துடன் தப்பி இருக்கிறார். பிரெஞ்சு போலீஸ் அதிகாரியின் கருத்துப்படி தான் இப்படி ஒரு கோரமான கொலையை பார்க்கவில்லை தனது வாழ்நாளில் என சொல்லி இருக்கிறார். இக்கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இவர் பிணையில் வெளியே வந்து கனடாவுக்கு தப்பி வந்திருக்கிறார். 

 கனடாவில் கைரேகை அடையாள பதிவுக்கு செல்லாமல் ஒழித்து திரிந்த வேளையில் இன்டர்போல் போலீசார், கனடிய போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டு. கனடிய காவல்துறை இவரை பிடித்தது. இப்பொழுது இவர் பிரான்சுக்கு கொலை கொலை முயற்சி போன்ற வழக்குகளுக்கு முகம் கொடுக்க பிரான்சுக்கு அனுப்பப்பட உள்ளார். பிரசன்னா நாகலிங்கம் அல்லது அஜந்தன் சுப்பிரமணியம் என்ற பெயர்களில் இவர் நடமாடியதாக போலீசார் தெரிவிக்கின்றனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.