நாடாளுமன்றில் அர்ச்சுனா வெளியிட்ட கருத்து!

 


வடக்கு மாகாணத்தைப் பிடித்திருந்த தொற்று ஒன்றையே இதற்கு முந்திய அரசாங்கத்தில் கண்டதாக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா  நாடாளுமன்றத்தில்  உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்தாவது,

அந்த அரசாங்கத்தில் இனவாதம் இருந்தது, எங்களைப் பிளவுபடுத்தி பிரித்து எங்களை தமிழர்களாக ஆட்சி செய்தார்கள்.

அநுர குமார அரசாங்கம் இதுவரை அவ்வாறு  எதையும் செய்யவில்லை, வடக்கை பிரதிநிதித்துவம் செய்வதனால் அதை நான் பெருமிதத்துடன் சொல்ல விரும்புகிறேன்.

தமிழ் மக்களிடம் இருந்து  தேசிய மக்கள் சக்தி கட்சியினால் மூன்று பேர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்..

வடக்கிலே எங்களிடையே பொய் அரசியல் செய்கின்ற அரசியல்வாதிகளை இல்லாமல் செய்து சுயாதீன குழுக்களில் போட்டியிட்ட எங்களை மக்கள் தெரிவு செய்து இருக்கிறார்கள்.

ஆகவே, இந்த அரசாங்கம் எங்களுக்கு எப்போதும் தீமை செய்யாது என்று சொல்லி மக்கள் எங்களுக்கு வாக்களித்து இருக்கிறார்கள்.

ஆகவே,  கௌரவ உறுப்பினருக்கு கதைக்க இடம் அளியுங்கள்.

இன்னுமொரு விடயத்தை நான் சொல்ல வேண்டும், எதிர் கட்சி தலைவர் அலுவலகத்தில் என்னை தாக்கினார்கள் நான் வைத்தியர். சிறு பிள்ளை போல பேச விரும்பவில்லை. என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கூறியுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.