உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்திய சுனாமி பேபி!!
சுனாமிபேபி என்று அழைக்கப்படும் அபிலாஷ் ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்காக இன்று வியாழககிழமை தனது இல்லத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சுனாமி அனர்த்தம் இடம்பெற்று 20 வருடங்கள் பூர்த்தியாகின்றது.
கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையின்போது இரண்டு மாதம் ஒருவாரமும் நிறைந்த குழந்தையாக சுனாமி பேபி 81 எனும் பெயருடன் உலகம் முழுவதும் பேசும் குழந்தையாக மாறினாயவர் ஜெயராசா அபிலாஷ்.
காரணம் அந்த குழந்தை தங்களுடையது எனது 09 தாய்மார்கள் போராடினர்.
இதனால் ஏற்பட்ட குழப்பத்தினால் வைத்தியசாலை நிர்வாகம் கல்முனை நீதவான் நீதிமன்றத்தை நாடியது. இதனையடுத்து ஒன்பது தாய்மார்களையும் மரபணு பரிசோதனை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.
52 நாட்களின் பின்னர் ஜெயராசா யுனித்தலா தம்பதியினரின் புதல்வனே அபிலாஷ் என நிரூபணமாகியது. பின்னர் அந்தக் குழந்தை ஜெயராசா யுனித்தலா தம்பதியினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையால் தனது வீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத் தூபியில் சுனாமி பேபியான அபிலாஷ் தனது பெற்றோருடன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை