ஜனாதிபதி அனுரகுமார தெரிவித்த முக்கிய கருத்து!!

 


தாம் இனவாதத்தை ஒருபோதும் மீண்டும் அனுமதிக்கப் போவதில்லை என்றும்  ஊடக சுதந்திரத்தை எந்த வகையிலும் தடுக்கவோ மட்டுப்படுத்தவோ தாம் தயாரில்லை எனவும்  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


 ஜனாதிபதி அலுவலகத்தில் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.


சிறந்த அரசியல் கலாசாரத்தை மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அதற்காகவே தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்துள்ளதாகவும் மக்கள் எதிர்பார்க்கும் புதிய அரசியல்இ சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இணையுமாறு அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.


 பல தசாப்த காலங்கள் நாடு யுத்தத்திற்கு முகம் கொடுத்ததை நினைவு கூர்ந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இனவாதத்தை மீண்டும் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் 


அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் தொடர்பில் எந்த நேரத்திலும் அரசாங்கத்தைக் கேள்விக்குட்படுத்தவோ விமர்சிக்கவோ ஊடகங்களுக்கு எந்தத் தடையும் இல்லையென்றாலும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு பாதகமான பொய்யான தகவல்களை வெளியிட வேண்டாம் எனவும்  ஊடக நிறுவன பிரதானிகளிடம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளதுடன்  ஊடக சுதந்திரத்தை எந்த வகையிலும் தடுக்கவோ  மட்டுப்படுத்தவோ தாம் தயாரில்லை எனவும் தெரிவித்தார்.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.