அருணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் காதலி அர்ச்சனா!!

 


பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் மக்கள் ஆவலோடு எதிர்பார்த்த ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது.


இதில் ஒவ்வொரு போட்டியாளரின் குடும்பத்தினரும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று அன்பை பகிர்ந்து வருகின்றனர்.


அந்தவகையில் முதல் நாளில் தீபக்கின் மனைவி சிவரஞ்சனி மற்றும் மகன் வந்திருந்தனர்.


அதனை தொடர்ந்து மஞ்சரி குடும்பத்தினர் வந்தனர், அடுத்ததாக ரயான் மற்றும் விஷால் குடும்பத்தினர் வந்திருந்தனர்.


இரண்டாம் நாளில் பவித்ரா, ராணவ், செளந்தர்யா மற்றும் அன்ஷிதாவின் குடும்பத்தார் வந்திருந்தனர்.


இதற்கடுத்து மூன்றாம் நாளான இன்று முதலில் ஜெஃப்ரியின் அம்மா மற்றும் அப்பா காலையிலேயே எண்ட்ரி கொடுத்தனர்.


அடுத்ததாக அருண் பிரசாத்தின் பெற்றோர் வந்தனர். மூன்றாவதாக முத்துக்குமரனின் பெற்றோர்கள் வந்தனர். இறுதியாக ஜாக்குலினின் தாய் வருகை தந்திருந்தார்.  

அனைவரும் தங்கள் குடும்பத்தாரை பார்த்த குஷியில் இருக்கும் நிலையில், அவர்களுக்கு ப்ரீஸ் டாஸ்க்கில் செம ட்விஸ்ட் ஒன்றை பிக்பாஸ் வைத்திருக்கிறாராம்.

அதன்படி நாளை உள்ளே உள்ள போட்டியாளர்களின் நண்பர்கள் எண்ட்ரி கொடுக்க உள்ளார்களாம்.


அந்தவகையில் அருண் பிரசாத்தின் காதலி அர்ச்சனாவும் நாளை பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.  



இதுமட்டும் நடந்தால் இந்தவாரம் டிஆர்பி அதிகரிகரித்துவிடும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.