முதலை கடித்து பெண் மரணம்!!

 


வவுனியாவில் உள்ள உலுக்குளம் - பாவற்குளம் பகுதியில் பெண்ணொருவர் முதலை கடித்துப் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த சம்பவம் நேற்றையதினம் (21-12-2024) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த சம்பவத்தில் 67 வயதுடைய வயோதிபப் பெண்ணே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


உயிரிழந்தவர் கால்நடைகளுடன் பயணித்தபோது கால்வாயில் முதலை கடித்து உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


சம்பவம் தொடர்பில் உலுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.