விலை போகாக் கலைஞானம்!!

 


விருதுக்காய் விலை பேசும்
கலி காலம்...
சேவை ஏதும் செய்யாது
தேவை இல்லா விருதுகளை
பேதையரும் பெற்றிடுவர்..
போதையிலே தத்தளிக்கும்
பொழுது கழிக்கும் தாத்தாக்களும்
புகழ் போதைக்காய் காசை அள்ளி இறைத்திடுவார்...
ஆடு போல பல விருதை
அவணியிலே வாங்கி விட
அறாவட்டிக் கடன் வாங்கி
அந்தரத்தில் தூங்கிடுவர்..
தாம் பெரிய கலைஞர் என்று
தரணியிலே செப்பிடுவர்
தாம்... தன... தகிட என்று குதித்திடுவர்..
வீண் கதைகள் பல பேசி
வீணாக வாய் நோவார்
தானே தன்னை உயர்த்திடுவர்...
வந்த வழி மறந்து விட்டு
வகை வகையாய் வர்ணிப்பர்
வந்து வந்து பேச மட்டும்
வருடக் கணக்கில் சிந்திப்பர்...
வெளிநாட்டுப் பணக் காசில்
வெள்ளக் கார வாழ்வு வாழ்த்திடுவர்
வேறேன்ன வேதாளம் முருங்கையிலே கூத்தாடும்...
அன்றாடம் ஒரு கூட்டம் அவரோடு சுற்றிடுவர்
அன்றாடத் தினக் கூலி இப்ப
ஐ பையாச் சுற்றிடுவர்....
கண்டாலும் காணாது திரும்பிடுவர்
காணாத விருதுகளை காசு கொடுத்து வாங்கிடுவர்...
அவர் ஆணோ? அவள் பெண்ணோ?
திறமை ஒன்றும் தேவை இல்லை கொஞ்சம்
திரள் நிதி இருந்தால் நல்ல விருதை நாமும் வாங்கலாம்..
வடிவாக் கொஞ்சம் கதைக்க வேணும்
வடிவாக் கொஞ்சம் இருக்க வேணும்
பிறகு என்ன காஞ்ச
விறகு எண்டாலும்
நல்ல விலை போகும் விருதுகள் விற்பனைக்கு...
#குறிப்பு :-யார் மனதையும் புண்படுத்தவல்ல மாறாகப் பண் படுத்த...
கவியோடு
திரியாயூரன் ✍🏻
2014.12.06



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.