பிரதமருக்கு எதிராக மனு தாக்கல்!!
இலங்கையின் பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ருஹுனு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேன ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அரசியல் தேவை காரணமாகவே பதவி நீக்கம் செய்யப்பட்டதாக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேன குறித்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
துணைவேந்தர் பதவிக்கு தகுதியான அதிகாரியை நியமிப்பதில் நடைமுறை மீறப்பட்டுள்ளதாகவும் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளதுடன் கல்வி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ஹரினி அமரசூரிய, உயர்கல்வி அமைச்சின் செயலாளர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆகியவை பொறுப்புக்கூற வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை