நாடு கடத்தப்படவுள்ள தாயும் மகளும்!!
வெளிநாட்டுப் பெண்ணொருவரும் அவரது மகளும் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளனர்.
நேற்றைய தினம் நத்தார் பண்டிகையை முன்னிட்டு களுத்துறை சிறைச்சாலையில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 பேர் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.
இவர்களில் ரஷ்ய பெண் ஒருவரும் அவரது 4 வயது மகளும் அடங்குவதாக சிறைச்சாலை அத்தியட்சகர் வசந்த குமார ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் கீழ் வெளிநாட்டு பெண்ணுக்கு களுத்துறை நீதிமன்றினால் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று விடுவிக்கப்பட்டு வெலிசர குடிவரவு தடுப்பு முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த இருவரையும் எதிர்வரும் நாட்களில் ரஷ்யாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை