வாளுடன் காணொளி வெளியிட்ட சிறுவன் கைது!!
யாழ்ப்பாணத்தில் , வாளுடன் சமூக வலைத்தளத்தில் காணொளிகளை வெளியிட்ட சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் சுழிபுரம் பகுதியை சேர்ந்த 17 வயதான சிறுவனே கைதாகியுள்ளார்.
கைதான சிறுவன் , வாளுடன் பல்வேறு கோணங்களில் காணொளிகளை எடுத்து , அவற்றை ரிக் ரோக் தளத்தில் பகிர்ந்து வந்துள்ளார்.
இது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து , சிறுவனை பொலிஸார் கைது செய்ததுடன் , சிறுவனிடம் இருந்து வாள் ஒன்றினையும் மீட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சிறுவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை