புங்குடுதீவில் வங்கிச்சேவை இல்லை!!
யாழ். புங்குடுதீவு பிரதேசத்தில் மிக நீண்டகாலமாக அரச வங்கிகளோ அல்லது தனியார் வங்கிகளோ காணப்படவில்லையென்றும் இதன் காரணமாக ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் பாதிப்படைவதாக சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் பிரமுகர் திரு. கருணாகரன் குணாளன் தெரிவித்துள்ளார்.
குறைந்தளவான பணத்தை பெற்றுக்கொள்ளவேண்டியிருந்தாலும் அதிகளவான பணத்தை செலவழித்து நீண்டதூரம் பயணிக்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் புங்குடுதீவு மக்கள் காணப்படுவதனால் உடனடியாக நிரந்தரமாக ஏ.ரி.எம் இயந்திரம் அமைப்பதற்கு தேவையான இடத்தினையோ அல்லது கட்டிடத்தினையோ
புங்குடுதீவு சந்தையடி குறிகாட்டுவான் பிரதான வீதியில் அன்பளிப்பாக வழங்குவதற்கு தயாராகவே தனது குடும்பத்தினர் உள்ளதாகவும் கருணாகரன் குணாளன் தெரிவித்துள்ளதோடு 0778945856 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறும் அரச அல்லது தனியார் வங்கிச்சேவை நிறுவனங்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை