இன்று முதல் நட்டஈடு!!
கடந்த வருடம் நவம்பர் மாதம் வெள்ளத்தினால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கான நட்டஈடு இன்று (30) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து நட்டஈடு வழங்கப்படவுள்ளதாக அதன் தலைவர் பேமசிறி ஜசிங்கராச்சி தெரிவித்தார்.
அதன்படி, பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளின் கணக்கில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
13 ஆயிரத்து 379 ஏக்கருக்கு இன்று இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று நெல் பயிர் செய்கை விவசாயிகளுக்கு மாத்திரமே இந்த நட்டஈடு கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை