கல்வியை நவீனமயப்படுத்த பிரதமர் விசேட கவனம்!!
இலங்கையின் பாடசாலைக் கல்வியை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தின்கீழ் உலக வங்கியின் அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலின்போது, கடந்த சில வருடங்களாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலைகளுக்காக செயற்படுத்தப்பட்ட திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது
அத்துடன், மாணவர்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது, இடைநிலைக் கல்விக்கான தகவல் தொழில்நுட்பப் பாடப்பகுதியை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவௌ ஆகியோர் கலந்துகொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை