காணாமல் போனவர் சடலமாக மீட்பு!!
மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி - கோணாவில் மத்தியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர், காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்தில் நேற்றுமுன்தினம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது கிளிநொச்சி முறிப்பு குளத்தின் தடுப்பு அணையில், காணாமல் போன நபரின் துவிச்சக்கர வண்டியும் அவரது செருப்பும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் முறிப்பு குளத்தில் தேடும் பணிகள் நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்றையதினம்(4) முறிப்பு குளத்தில் மிதந்த நிலையில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
மீட்கப்பட்ட சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை