கள் குடித்தவர் மரணம்!!

 


யாழ்ப்பாணம் இளவாலை தெற்கு பகுதியில் உள்ள கள்ளு தவறணையில் கள்ளு அருந்தியவர் திடீரென உயிரிழந்துள்ளார். இதன்போது சங்குவேலி தெற்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 64 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


நேற்றையதினம் குறித்த தவறணையில் கள்ளினை குடித்தவேளை அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


இந்நிலையில் இளவாலை பொலிஸார் அவரது சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.


அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.