மா.வை. மரணத்தில் மர்மம்?!!

 


இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மா.வை சேனாதிராஜா மரணத்தில் மர்மம் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


மா.வை. சேனாதிராசா அவர்களின்  மரணம் இயற்கையானதல்ல என்றும்  அதற்குப் பின்னணியில் கொடூரமான உளவியல் அழுத்தம் உள்ளதாகவும்  வைத்திய நிபுணர்களும்  குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்.


அவருக்கு ஏற்பட்ட கடுமையான மன அழுத்தம் அதிர்ச்சி அல்லது தாங்க முடியாத ஏக்கம் தலையின் முக்கிய நரம்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து அதன் செயல்பாடு பாதிப்படைய  காரணமாக இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. 


 சி.வி.கே. சிவஞானம் வைத்தியர் சத்தியலிங்கம் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர்  மா.வையைத்   தலைவர் பதவியில் இருந்து நீக்க எடுத்த பிரயத்தனங்கள் அவரது உயிரிழப்பிற்கு வழிவகுத்திருக்கலாம் எனவும்  மா.வையை தமிழரசுக் கட்சியில் இருந்து முழுமையாக நீக்க சுமந்திரன் வழிகாட்டலில் சில முக்கிய உறுப்பினர்கள் கையெழுத்திட்ட சம்பவம் மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.


சி.வி.கே. சிவஞானம் மற்றும் வைத்தியர் சத்தியலிங்கம் இருவரும் கடந்த 26 ஆம் திகதி  மாவையின் வீட்டிற்குச் சென்ற நிலையில் அவரைக் கட்சியில் இருந்து விரட்டத் திட்டமிட்டு கடுமையான அழுத்தம் கொடுத்ததாகவும் இதனால் மாவை அதிகமான மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் உறவினர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மாவையை தமிழரசுக் கட்சியில் இருந்து முழுமையாக நீக்க சுமந்திரன் வழிகாட்டலில் சில முக்கிய உறுப்பினர்கள் கையெழுத்திட்ட சம்பவம் மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாகவும் 19 அரசியல்வாதிகள் மாவையின் மரணத்திற்குப் பின்னணியில் உள்ளதாகவும்  குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.