அரையிறுதிக்கு முன்னேறிய சபலெங்கா!

 


உலகின் முதல்நிலை வீராங்கனையான அரினா சபலென்கா (Aryna Sabalenka) 6-3 6-4 என்ற செட் கணக்கில் மேரி பௌஸ்கோவாவை தோற்கடித்து பிரிஸ்பேன் சர்வதேச அரையிறுதிக்கு முன்னேறினார்.


முதலிடத்தில் உள்ள பெலாரஷ்ய வீரர், உலகின் முன்னாள் இரண்டாம் நிலை வீராங்கனையான ஒன்ஸ் ஜபியூரை 6-4 7-6 (7-2) என்ற கணக்கில் வீழ்த்திய 17 வயதான மிர்ரா ஆண்ட்ரீவாவை இப்போது அரையிறுதியில் எதிர்கொள்வார்.


இருவரும் இறுதியாக 2024 பிரெஞ்ச் ஓபனில் சந்தித்தனர்.


அங்கு ரஷ்ய இளம் வீராங்கனை, சபாலெங்காவை 6-7 (5-7) 6-4 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 1997 இல் மார்டினா ஹிங்கிஸுக்குப் பின்னர் கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்கு வந்த இளம் வீராங்கனை ஆனார்.


இவேளை மற்றைய பிரிஸ்பேன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ரஷ்யாவின் பொலினா குடெர்மெடோவாவும், உக்ரேனின் அன்ஹெலினா கலினினாவும் சந்திக்கின்றனர்.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.