சுதந்திர தின நிகழ்வு தொடர்பான அறிவிப்பு!!
77 ஆவது சுதந்திர தின நிகழ்விற்காக அரசாங்கம் 80 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ.எச்.எம்.எச் அபயரத்ன தெரிவித்துள்ளார்.
ஒதுக்கப்பட்ட நிதிக்குள் செலவினங்களை மட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, இம்முறை சுதந்திர தின அணிவகுப்பில் 4,421 ஆயுதப்படை மற்றும் பொலிசார் கலந்து கொள்ளவுள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
2,052 இராணுவத்தினர், 668 கடற்படையினர், 776 விமானப்படையினர், 549 பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், 370 சிவில் பாதுகாப்பு படையினர் மற்றும் 550 தேசிய கெடட் படை வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் குறிப்பிட்டார்.
77 ஆவது சுதந்திர தின விழாவை எதிர்வரும் பெப்ரவரி 04 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர சதுக்க வளாகத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை