இது ஒரு உண்மைச் சம்பவம்!!
இந்த சம்பவம் கர்நாடகாவில் உள்ள கொம்பாரு சரணாலயத்தை ஒட்டியுள்ள தங்கு விடுதியில் நிகழ்த்துள்ளது…
ஒரு நாள் ஒரு சிறுத்தை நாயொன்றை துரத்திக் கொண்டே வந்தது.
நாய் ஜன்னல் வழியாக ஒரு கழிவறைக்குள் நுழைந்தது.
அந்தக் கழிவறை வெளியில் இருந்து பூட்டப்பட்டு இருந்தது.
துரத்தி வந்த சிறுத்தையும் நாயின் பின்னால் வந்து ஜன்னல் வழியால் கழிவறைக்குள் நுழைந்தது..
அந்தப் பட படப்பில் அந்த ஜன்னல் கதவுகளும் பூட்டப்ட்டு விட்டன..
இப்போது நாய், சிறுத்தை இரண்டுமே அந்தக் கழிவறைக்குள் மாட்டிக் கொண்டன...
சிறுத்தையை பார்த்ததும் நாய் பீதியடைந்து ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்தது.
நாய் பயத்தில் குரைக்கக்கூட துணியவில்லை.
ஒரே பாய்ச்சலில் நாயைக் கொன்று தனது பசியை சிறுத்தை தீர்த்துக் கொண்டிருக்கலாம்.
சிறுத்தை பசியுடன் நாயை துரத்தி வந்தாலும் நாயை சாப்பிடவில்லை.
ஆனால் இரண்டு விலங்குகளும் கிட்டத்தட்ட பன்னிரண்டு மணி நேரம் வெவ்வேறு மூலைகளில் ஒரே அறையில் ஒன்றாக இருந்தன.
இந்த பன்னிரெண்டு மணி நேரத்தில் சிறுத்தை யும் நாயும் அமைதியாக ஒவ்வொரு மூலையில் படுத்தாவாறு இருந்தன…
வனத்துறையினர் சிறுத்தையை டிரான்குவிலைசர் டார்ட் (tranquilizer dart) மூலம் சிறுத்தையை பிடித்தனர்.
இப்போது கேள்வி என்னவெனில், பசியுடன் இருந்த சிறுத்தை ஏன் நாயைக் கொன்று தின்னவில்லை?
இந்த கேள்விக்கு வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் பின்வருமாறு பதிலளித்தனர்:
‘வன விலங்குகள் தங்கள் சுதந்திரத்தை மிகவும் போற்றுவன...
அவர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டது என்பதை உணர்ந்தவுடன் ஏற்பட்ட அதிர்ச்சி இந்த விலங்கை
பசியை மறக்கும் அளவுக்கு ஆழ்ந்த துக்கத்தை அனுபவித்திருக்கும்…
இந்த அதிர்ச்சியும் துக்கமும் இந்த விலங்கை செயலிழக்க வைத்து விட்டது என்றே கூற வேண்டும்.
அப்போது வயிற்றுக்கு உணவளிக்கும் அவர்களின் இயல்பான உந்துதல் மறையத் தொடங்குகிறது’…
இதிலிருந்து நாம் அறியக் கூடிய பாடம்:
சுதந்திரம் தான் மகிழ்வின் அடிநாதம்..
மகிழ்வு என்பதன் பொருள் சுதந்திரம் என்ற சொல்லில் கரைந்துள்ளது…
சுதந்திரம் என்பது நாம் விரும்பியவாறு விரும்பிய வகையில் வாழ்வது...
நாம் அன்புக்கு அடிமையாக வாழுவதிலும் ஒரு சுகம் இருக்கிறது என்றால் நாம் அவ்வாறு அடிமைப்பட்டு வாழுவதனை தெரிவு செய்யும் சுதந்திரம் எம்மிடம் இருக்க வேண்டும்.....
சுதந்திரம் என்பதே எம்மை மூச்சு விட அனுமதிக்கிறது…
சுதந்திரம் என்பதே எமது பேச்சுக்கு வழி செய்கிறது….
சுதந்திரமே ஒரு தாகம்…
சுதந்திரமே தாகத்தை உணர வைக்கிறது….
சுதந்திரமே பசியாக இருக்கிறது….
சுதந்திரமே எம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது…
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை