வல்லையின் பட்டப்போட்டி!!

 




உழவர் திருவிழாவை முன்னிட்டு  யாழ்ப்பாணத்தில் இ "வல்வை பட்டத் திருவிழா - 2025" வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நேற்றைய தினம் (14) நடைபெற்றது.


வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் விமலதாஸ் கவிச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் சிவபாதசுந்தரம் சத்தியசீலனும் கௌரவ விருந்தினராக வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற செயலாளர் சத்தியநாதன் கிசோக்குமாரும் கலந்து கொண்டிருந்தனர். 


நேற்றைய பட்டப் போட்டியில் சுமார் 130 பட்டங்கள்  விண்ணில் பறக்க விடப்பட்டிருந்தன. 


 இந்தப் பட்டப்போட்டியில் "உயிர்த்தெழும் ராகன்" பட்டம் முதலாமிடத்தையும் "மின் பிறப்பாக்கி பட்டம்" இரண்டாம் இடத்தினையும்  "ஹெலிகாப்டர் மூலம் தூக்கி செல்லும் திரையரங்கு" பட்டம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.


ஜனாதிபதி அனுரவின் புகைப்படத்துடன் தூய்மையான எதிர்காலம் எனும் வாசகம் பொறிக்கப்பட்ட பட்டமும் பறக்கவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.