தற்கொலை செய்துகொண்ட வவுனியா பெண்!!
கொழும்பு - மருதானை பொலிஸ் நிலையத்தில் உள்ள பெண்கள் சிறைக்கூடத்தில் வவுனியா பெண்ணொருவர் தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை நடைபெறும் வரை பொலிஸ் நிலைய பிணவறையில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம வீரசிங்க உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
32 வயதான குறித்த பெண் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் (22) தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிரிழந்தவர் வவுனிக்குளம் - அம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணைக்கு அமைய இரண்டு நாட்களுக்கு முன்னர் மருதானை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.
கைதான பெண் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் சிறைச்சாலையின் இரும்புக் கதவில் தனது பாவாடையை கட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்துள்ளார்.
கருத்துகள் இல்லை