30 மில்லியன் ரூபாய் மோசடி செய்த தமிழ் தம்பதி!!

 


வெளிநாட்டுக்கு அனுப்புவதாக  கூறி  30 மில்லியன் ரூபாய் மோசடி செய்த மட்டக்களப்பு தம்பதி,  வவுனியாவில் மறைந்திருந்த  நிலையில்   வவுனியா தனிப்படை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


32 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட நபர் 55 வயதும் அவரது மனைவி 48 வயதும் உடையவராவார்.


கைதான தம்பதி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம் நேற்று (22) உத்தரவிட்டது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,


ருமேனியாவிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி சுமார் 30 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாக ஒரு தம்பதியினருக்கு எதிராக முறைப்பாடுகள் மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸாருக்கு செய்யப்பட்டிருந்தது.


விசாரணையின் போது 28 இற்கும் மேற்பட்ட நபர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக வாக்குறுதி அளித்து நிதி மோசடி செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

அவர்கள் 30 மில்லியன் ரூபாய் நிதியை மோசடி செய்ததாக செய்யப்பட்ட வழக்குக்கு அமைய ஏறாவூர் நீதிமன்றத்தால் கணவனுக்கு எதிராக 16 பிடியாணைகளும், மனைவிக்கு எதிராக 16 பிடியாணைகளும் ஆக 32 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், குறித்த தம்பதியினர் மட்டக்களப்பில் இருந்து வெளியேறி வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருந்தனர்.


வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து தனிப்படை பொலிஸார் தோணிக்கல் பகுதியில் சுற்றி வளைப்பை மேற்கொண்டு குறித்த தம்பதியினரை கடந்த 21 ஆம் திகதி கைது செய்தனர்.


மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இருவரையும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்திய நிலையில 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.