கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தினுள் வைத்து துப்பாக்கிச்சூடு - பிரபல பாதாள தலைவர் உயிரிழப்பு!!📸


சட்டத்தரணி வேடமணிந்து வந்த துப்பாக்கிதாரி, நீதிமன்றத்தினுள் வைத்து துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் கனேமுல்ல சஞ்சீவ உயிரிழந்த சம்பவத்தில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் சட்டத்தரணியின் தோற்றத்தில் வருகை தந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி தற்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

பாதால உலகக் குழுவொன்றைச் சேர்ந்தவரான கனேமுல்ல சஞ்சீவவை விசாரணை நடவடிக்கைகளுக்காக பூஸா சிறைச்சாலையிலிருந்து புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட சந்தர்ப்பத்திலேயே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.