பாதாள உலகக் கும்பல்கள் தொடர்பில் முக்கிய தகவல்!!

 


நாட்டில் 58 ஒழுங்கமைக்கப்பட்டபாதாள உலகக் கும்பல்களும், அவர்களைப் பின்தொடரும்1,400  சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வரும் சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

இந்த ஆண்டு மட்டும் 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், 5 கத்திக்குத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். 

இந்த ஆண்டு நடந்த 17 துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார்.

பொலிஸ் மற்றும் முப்படைகளின் ஆயுதப் படைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் சில சம்பவங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டதாகவும், அதன்படி, அந்த அதிகாரிகளில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.