லசந்த கொலை தொடர்பில் புதிய விசாரணை!!

 


இலங்கை ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் புதிய விசாரணைகளை ஆரம்பித்து, மேலும் சாட்சியங்களை சேகரிக்க வேண்டுமாயின், அதனை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.


லசந்த விக்கிரமதுங்கவின் மகள் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர், இன்று (07) சபையில் முன்வைத்த விடயங்கள் தொடர்பில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே, பிரதமர் இதனை கூறினார்.


இதன்போது பிரதமர் மேலும் கூறுகையில்,


கடிதம் எனக்கு கிடைத்துள்ளது. அதற்குரிய பதிலை நான் உரியவருக்கு அனுப்புவேன். எவ்வாறாயினும் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.


தொடர்ந்தம் அதே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம். இந்த விடயத்தில் கரிசனையுடனேயே நாங்கள் இருக்கின்றோம். லசந்த விக்கிரமதுங்கவின் மகளின் கவலையை நாங்கள் நன்கு உணர்கின்றோம்.


ஜனாதிபதி இது தொடர்பாக தொடர்ந்தும் கலந்துரையாடி வருகின்றார். தொடர்ந்தும் விசாரணைகள முன்னெடுத்தோ தேவைப்பட்டால் புதிய விசாரணைகளை ஆரம்பித்தோ சாட்சியங்களை மேலும் சேகரித்து நீதியை நிலைநாட்ட நடவடிக்கைக எடுப்போம்.


இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு சாட்சியங்கள் உள்ளன. பல நிறுவனங்கள் இது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறினார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.