மணல் கடத்தலை வெடி வைத்து பிடித்த பொலிஸார்!!
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்றை பொலிஸார் வெடி வைத்து மடக்கிப்பிடித்தனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த உழவு இயந்திரம் குருநகர் பகுதியால் மணல் ஏற்றிச் சென்றவேளை, குருநகர் பகுதியில் உள்ள பொலிஸ் காவல் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸார் உழவு இயந்திரத்தை துரத்திச் சென்றனர்.
பின்னர் அரியாலை பகுதியில் வெடி வைத்து உழவு இயந்திரத்தை மீட்டதுடன், உழவு இயந்திரத்தின் சாரதியையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், உழவு இயந்திரத்துடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை