மட்டக்களப்பில் திடீர் பரிசோதனை பலர் சிக்கினர்!


மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அ.முரளீஸ்வரனின் ஆலோசனையின் கீழ் மட்டக்களப்பில் உணவு விற்பனை நிலையங்கள், உற்பத்தி நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.


வழக்குகள் தாக்கல்

இதன்போது மாமாங்கம் பொது சுகாதார பிரிவில் சுமார் 10 உணவு விற்பனை நிலையங்கள், உற்பத்தி நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மூன்று உணவு விற்பனை நிலையங்களுக்கு எதிராக ஐந்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


இதேபோன்று இருதயபுரம் பொது சுகாதார பிரிவில் சுமார் 23 உணவு விற்பனை நிலையங்கள், உற்பத்தி நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் 13 விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


இதன்போது, உணவு தயாரிப்புக்காக பயன்படுத்தக்கூடிய புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய உணவுப் பண்டங்கள் பெருமளவான பொருட்களும் பாவனைக்கு உதவாத பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.