அர்சசுனாவிடம பல மில்லியன் இழபபீடு கோரல்!!
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா எம்பியிடம் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி வழக்கறிஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேஸ்புக் சமூக ஊடகத்தில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, இழப்பீடு வழங்கக் கோரி வழக்கறிஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இந்த நோட்டீஸ் கடந்த மார்ச் 10 ஆம் திகதி வழக்கறிஞர் ஒருவர் ஊடாக, 59 வயது ஜெர்மன் குடிமகன் ஒருவர் சார்பாக அனுப்பியதாக தெரியவந்துள்ளது. அர்ஜுனா ராமநாதன் மற்றும் எச்.பி. சமரகோன் ஆகியோர் 2025 பிப்ரவரி 12 ஆம் திகதி பேஸ்புக்கில் வெளியிட்ட அவதூறான கருத்துக்கள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டனர்.
இதில் குற்றம் சாட்டப்பட்ட ஜேர்மன் குடிமகன் , குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக கூறப்பட்டதன் விளைவாக, அவரது மனைவி மற்றும் மகள் கடுமையான மன உளைச்சலுக்கும் , பொது அவமானத்திற்கும் ஆளானதாகவும், குறித்த நபரின் நற்பெயருக்கு கடுமையான சேதம் விளைவித்ததாகவும், அவரது தொழில் வாழ்க்கையில் களங்கம் ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நடத்தை தொடர்பாக அர்ஜுனா ராமநாதனுக்கு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அவர் அதை கவனத்தில் கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை