மூன்றாம் உலக போருடன் சூதாடும் உக்ரைன் சனாதிபதி!


உக்ரைன் சனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கிக்கும் அமெரிக்க சனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை சனாதிபதி ஜே.டி.வோன்ஸ்க்கும் இடையிலான சந்திப்பின் போது கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது கருத்து மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

உக்ரைன் சனாதிபதியை வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அத்துடன் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பும் இரத்தானது. இரு தரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடலில் பங்கேற்பதற்கு ஊடகவியலாளர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. 

இந்த சந்திப்பில், 'மூன்றாம் உலக போருடன் உக்ரைன் சனாதிபதி சூதாடுகிறார்" என அமெரிக்க சனாதிபதி தெரிவித்தார். 

அத்துடன் தங்களுக்கு நன்றியுடன் இருக்குமாறும் அமெரிக்க சனாதிபதி, உக்ரைன் ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளார். 

அதேநேரம், ரஷ்ய சனாதிபதி விளாடிமிர் புடினுடன் எந்த 'சமரசமும்" இருக்க கூடாது என உக்ரைன் சனாதிபதி கூறியுள்ளார். 

இந்த சந்திப்பை அடுத்து சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த உக்ரைன் சனாதிபதி, அமெரிக்க சனாதிபதியுடனான மோதல் இரு தரப்புக்கும் 'நல்லதல்ல" என தெரிவித்துள்ளார். 

இதேவேளை, அமெரிக்க மற்றும் உக்ரைன் சனாதிபதிகளுடன் பிரித்தானிய பிரதமர் தொலைபேசியில் உரையாடியதாக அவரது பேச்சாளர் தெரிவித்தார்.  

உக்ரைனுடன் அசைக்க முடியாத ஆதரவை அவர் வெளிப்படுத்தியதாகவும் பிரித்தானிய பிரதமரின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.