காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும் எனும் நூல் யாழில் வெளியீடு!
காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்" எனும் தலைப்பிலான நூல் இன்று யாழ்ப்பாணத்தில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
கிராமிய உழைப்பாளர் சங்கம் மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் மரிய நாயகம் நியூட்டன் எழுதிய குறித்த நூல் வெளியிடப்பட்டது.
நிகழ்வின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஹேமன் குமார, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் நா.இன்பநாயகம் மற்றும் யாழ்.மாவட்ட கடற்றொழில் இணையத்தின் ஊடக பேச்சாளர் அ.அன்னராசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணி செயலாளர் தீபன் திலீசன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
எமது அமைப்பு சர்வதேச ரீதியாக முன்னெடுக்கப்படும் அமைப்பு பூகோள அரசியலில் இருந்து எம்மைப் பிரிக்க முடியாது.
பூகோள நிலப்பரப்பில் முக்கிய விடயமாக கடற்றொழிலாளர் பிரச்சனைகள் இந்திய மீனவர்கள் எமது தொழிலை அழித்தல் இதற்கு போட்டியாக சீன வல்லரசு கடற்பண்ணைகளை நிறுவி பல விடயங்களை மேற்கொண்டு வருகின்றன.
சீனாவின் வருகையானது இந்த நூலினூடாக முழுமையாக விளங்கிக் கொள்ள முடிகிறது.
இந்தியாவிற்கு இலங்கை ஒரு பாதுகாப்பான தீவு ஆனால் சீன போன்ற வல்லரசு தடம் பதிப்பது ஆபத்தானது. ஆனால் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு எமது மக்கள் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக இந்திய பிரதமருடன் பேசிய போது பாதிப்புக்கள் தொடர்பாக அனைவரும் உறுதியாக கூறினர்.
ஆனால் இந்த விடயம் தமிழகத்தில் திட்டமிட்டு மூடி மறைக்கப்படுகிறது. இந்திய மீனவர்கள் தூண்டி இலங்கை கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் தான் சீண்டுவதாக ஒரு விடயத்தை கூறியிருக்கின்றனர்.
ஆனால் நாம் இதனை இரு தரப்பு மீனவர்களையும் சந்திக்க வைத்து பிரச்சனைகள் உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை