உலகையே உலுக்கிய காஷ்மீர் துப்பாக்கிச்சூடு - 26 பேர் பலி!📸


தெற்கு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது உலகையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இது மிக மோசமானது என காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.


பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் மோதி தனது செளதி பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு அவசரமாக இந்தியா திரும்பியுள்ளார். விமானநிலையத்திலேயே அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.


 "இந்த கொடூரமான சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்' என பிரதமர் மோதி தெரிவித்துள்ளார். ”பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உறுதி செய்யுமாறு டெல்லியில் உள்ள உள்ளுறை ஆணையருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்." என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.