ஊடகவியலாளர் நிமலராஐனை படுகொலை செய்த குற்றவாளி!


ஊடகவியலாளர் நிமலராஐன் 2000ம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 19 ம் திகதி யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை அவரது வீட்டில் ஆயுத தார்கள், வீட்டின் யன்னல் ஊடாக அவர்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். அப்போது அவர் எழுதிக்கொண்ட கட்டுரை மீது வீழ்ந்து உயிர் துறந்தார். 


இன்று ஊடகவியலாளர் நிமலராஐன் யாழில் படுகொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள் கடக்கும் நிலையிலும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பது பெரும் கவலைக்குரிய விடயம் ஒன்று.  


நீதி எப்படி கிடைக்கும்? 


ஆம், ஊடகவியலாளர் நிமலராஐன் படுகொலையோடு நேரடி தொடர்பில் இருந்த அந்த குற்றவாளி இன்னும் எம் மண்ணில் அதாவது யாழ் மண்ணில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். கனடா நாட்டு இரண்டை பிரஜா உரிமையை கொண்ட இவர் ஈபிடிபி யில் இருந்து இப்போது வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் புதிதாக ஒரு சுயோட்டை குழு ஒன்றை தனது தலைமையில் உருவாக்கி இம்முறை நடைபெற உள்ள பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுகின்றார். 


விடுதலை புலிகள் காலத்தில் அதுவும் குறிப்பாக 2000 - 2005 ம் ஆண்டு காலப்பகுதியில் யாழில் பல படுகொலைகள், கடத்தல், கப்பம் பெறுதல் போன்ற விடயங்கள் கடுமையாக நடைபெற்ற காலம். அந்த காலப்பகுதியில் ஈபிடிபி யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா விடுதலை புலிகளின் கொலை அச்சுறுத்தலுக்கு பயந்து கவச வாகனத்திலும், கொழும்பிலும் தான் இருந்து வந்தார். அப்படியான ஒரு சூழலில் ஈபிடிபி யின் யாழ் மாவட்ட அலுவலகத்தை தன்னகப்படுத்தி வைத்துக்கொண்டவர் தான் இந்த Vk ஜெகன் ( வேலும்மயிலும் குகேந்திரன் ) என்பவர். 


இவர் நேரடியாக இராணுவத்தின் ஒரு Agent ஆக அந்த காலப்பகுதியில் செயற்பட்டு வந்தார். இவருடைய நேரடியான தொடர்பில் பல குற்ற செயல்கள் யாழ் மாவட்டத்தில் நடைபெற்று வந்தது. அதில் மிக குறிப்பாது ஊடகவியலாளர் நிமலராஐன் படுகொலை, மற்றும் உதயன் பத்திரிக்கை நிறுவன ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டது. 


உதயன் பத்திரிக்கை ஊழியர் படுகொலைக்கு இவருக்கு தகவல் வழங்கியது இவருடைய உறவினர் ஒருவர் அதே உதயன் பத்திரிக்கையில் பணிபுரிந்து வந்தவர். இந்த சம்பவத்தின் பின் தகவல் வழங்கியவர் இந்தியா சென்று தற்போது நாட்டுக்கு திரும்பி வந்துவிட்டார். 


ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டது யாரால் ? என்பது பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் MA சுமந்திரன் ஒரு தடவை தீபம் பத்திரிக்கைக்கு தனது நேர்காணல் மூலம் மிக தெளிவாக தெரிவித்திருந்தார். அதன் பிறகு தான் ஈபிடிபி யோடு இருந்தால் தனக்கு ஆபத்து என நினைத்துக்கொண்ட vk ஜெகன் ஈபிடிபி யில் இருந்து தன்னை விலத்திக்கொண்டு கூட்டமைப்பில் இணைவதற்கு முயற்சிகள் செய்தார். ஆனால் சுமந்திரன் ஆயுத குழுக்களோடும், படுகொலைகளோடும் தொடர்பில் இருந்தவர்களை கூட்டமைப்பில் இணைக்க விருப்பம் காட்டாத போது Vk ஜெகன் விக்னேஸ்வரன் ஐயாவின் கட்சியில் இணைய முயற்சிகள் செய்து அதுவும் கைகூடவில்லை இப்படி எதுவும் கைகூடாத போது தன்னை காப்பாற்றிக்கொள்ள தானாக சுயேட்சை குழு ஒன்றை உருவாக்கி தனக்கான அரசியல் பாதுகாப்பை தேடி வருகின்றார். 


இறுதியாக நடந்துமுடிந்த தேர்தலில் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் Npp க்கு ஆதரவு கொடுத்து ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்பும் போது வடக்கு மக்களும் அதை தெரிவு செய்து Npp அரசுக்கு ஆதரவு அளித்து வாக்குகளை பதிவு செய்தார்கள். இதன்மூலமாக யாழ் மாவட்டத்தில் இருந்து 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் Npp சார்பாக பாராளுமன்றம் தெரிவாகினார்கள். இதில் ஸ்ரீபவானந்தராஜா அவர்களின் வெற்றியை VK ஜெகன் தன்னால் தான் அவர் வெற்றியடைந்தார் என்ற ஒரு விம்பத்தை உருவாக்கி Npp அரசுக்கு தான் ஆதரவான நபராக தன்னை முன்னிறுத்தி கொண்டார். இதற்கு எல்லாம் முக்கியமான காரணம் Npp அரசு பழைய குற்றச்செயல்களை மீள விசாரிக்கும் போது தன்னை காப்பாற்றிகொள்ள vk ஜெகன் போட்ட திட்டங்கள். 


இவ்வாறு பல முனைகளில் தன்னை பாதுகாத்து வருகின்றார் . இவர் ஈபிடிபி யில் இருந்த காலப்பகுதியில் இவருக்கு கையூட்டல் கொடுத்து அரச வேலைகளை பெற்றவர்கள் வேறு பல தேவைகளை பூர்த்தி செய்தவர்கள் இன்று யாழில் பல அரச திணைக்களங்களில் உயர்பதவில் இருந்து வருகின்றார்கள். அவர்களை இன்று சரியாக பயன்படுத்தி தான் நேரடியாக தொடர்பு ஏற்படுத்தாது கைகூலிகளை வைத்து இன்றும் பல 

மோசடிகளை செய்துவருகின்றார். நிலங்களை ஆட்சி உரிமம் பிடிப்பது, அடிதடி குழு ஒன்றை உருவாக்கி அவர்கள் ஊடாக பல அச்சுறுத்தல்களை செய்வது, சக போட்டியிடும் வேட்பாளர்களை மிரட்டுவது போன்ற விடயங்களை தனது அடியாட்களை வைத்து செய்து வருகின்றார். அன்று ஆயுத குழுவாக இயங்கி வந்தவர் அதே பாணியில் இன்றும் சில இளைஞர்களை தூண்டிவிட்டு அவர்களை வைத்து தன்னை பாதுகாத்தும் தனக்கான தேவைகளை இன்றும் செய்து வருகின்றார். இதற்கு பல அரச அதிகாரிகளும் உடந்தையாக இருந்து வருகின்றார்கள். 


ஆனால், எந்த இடத்திலும் தான் தான் செய்வது என்று அவர் காட்டிக்கொள்ளுவதில்லை. யாழில் நடந்த பல கடத்தல், படுகொலைகள், கப்பல் பெறுதல் இவரால் இடம்பெற்றது என்பது உறுதிசெய்த பின் தமிழீழ விடுதலை புலிகள் இவரை கொலை செய்ய திட்டமிட்டு ஆள் அனுப்பி இருந்தது இவருடைய காலகஷ்டம் அப்படி அனுப்பப்பட்டவர் இவருடைய உறவினர் என்பதால் இவரை கொலை செய்யாமல் தப்பிச்செல்ல வைத்தார். அப்படி தப்பி செல்ல வைத்தவரும் இன்னும் உயிருடன் இந்தியாவில் போரூரில் இருக்கின்றார். 


கனடா நாட்டு இரண்டை பிரஜையாக இருக்கும் இவர் தேர்தல் காலங்களில் தனது குற்ற செயல்களை யாராவது ஊடகங்களில் தெரிவித்துவிட்டால் தனக்கு ஆபத்து என்று அந்த அந்த நேரங்களில் கனடா சென்றுவிடுவார். தற்போதும் தன் தலைமையில் சுயேட்சை குழுவை களம் இறக்கிவிட்டு கனடாவில் தான் இருக்கின்றார். 


எனவே இதுபோன்ற படுகொலைகளை செய்தவர்கள் வெளிநாட்டுக்கு ஓடி ஒளிந்திருந்துவிட்டு மீண்டு வந்து தங்கள் கரங்களை சுத்தம் செய்ய எடுக்கு நடவடிக்கைகளுக்கு எம் நாட்டின் நீதி என்ன? இவர்களால் இறந்தவர்களின் ஆத்மா இவர்களை சும்மா விடுமா?


ஊடகவியலாளர் நிமலராஐன் படுகொலைக்கு நீதி கிடைக்க போராடுவோம் இதுபோன்ற குற்ற செயல்களை செய்த இனத்துரோகிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை கிடைக்க போராடுவோம், சட்டத்தின் முன் நின்று பதில் சொல்ல வேண்டியவர்கள் தங்கள் கரங்களை சுத்தப்படுத்த இப்ப போடும் வேஷங்களை கலைக்க வேண்டும். அதுவரை இந்த செய்தியை share செய்யுங்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.