யாழ் பொலிஸ் நிலையத்தில் நடப்பது என்ன?
யாழ் பொலிஸ் ரிலையத்தில் முறைப்பாடுகள் பதிய வருபவர்களை வழக்கு போடுங்கள் என பொலிசார் திருப்பி அனுப்புகிறார்கள். இப்ப எழுதமுடியாது என திருப்பி விரட்டுகின்றனர். சட்டத்தரணிகளுடன் தொடர்புகள் இருக்குமோ என எண்ணுமளவிற்கு பிறைவேற் கேஸ் போடும் படி முறைப்பாடுகளை ஏற்க மறுக்கின்றனர். உச்ச நீதிமன்று 4ம் மாடிக்கு போவது போல செல்லிடப்பேசிகளை வாயிலில் வாங்கிவைத்துவிட்டு கழுத்தில் அணிய ஒருவகை பதாகை கொடுக்கிறார்கள். செல்லிடப்பேசி ஆதாரங்கள் வாசலில் பறிக்கப்படுகின்றன..உள்ளே நடக்கும் பொலிஸார் புறக்கணிப்புகள், போனில் கடலைபோடுதல் என்பவற்றை போனில் பதிவேற்றமுடியாதளவிற்கு நாசூக்காகசெயற்படுகின்றனர். இதுவா ஊழல் அற்ற அரசாங்கம்என மக்கள் குழப்பமடையும் வண்ணம் நடந்துகொள்கின்றனர்..அதிலும் குறிப்பாக "சிறுவர் பெண்கள் பிரிவு"பெண் பொலிஸ் உத்தியோகத்தரிற்கு முறைப்பாடு எழுத கஸ்டமாம்..பெண்களுடன் அநாகரிகமாக நடந்துகொள்கிறார்..ஆண்கள் போனால் ஆனந்தமாக வரவேற்கிறார் .
கருத்துகள் இல்லை