NPP இனவாதத்தை நையான்டியாக ஜற்றி என்று பேசும் ஒலி!

 


உடல் அங்கவீனம் மற்றும் பேசும் போது உள்ள இயற்கையான குறைகாடுகளை வைத்து நையாண்டி பண்ணுவது, கிண்டலடிப்பது மனித குலப் பண்பல்ல! தனி மனித ஒழுக்கத்தையும் கேள்விக்குட்படுத்தும்.


அமைச்சரின் சொல்லாடல் ஒன்று பெரும் பேசு பொருளாக சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது!


அமைச்ச இரா.சந்திரசேகரம் இயற்கையாகவே பேசும் போது மூக்கடைப்பொன்று இருப்பதும் அதனால் அவரது பேசும் ஓசைகள் மூக்கினால் பேசுவது போன்றும், ஒலி வடிவத்தில் மாற்றமும் உண்டு. 


அதனால் வந்ததே குறிகாட்டுவான் இறங்குதுறை (ஜெற்றி) அவர் பேசும் போது ஜற்றி என்று பேசும் ஒலி கேட்கிறது.


JVP யின் கடந்த கால அரசியல் வரலாற்றில் தமிழ் மக்களின் நியாயபூர்வமான போராட்டத்தை, அரசியல் அபிலாசைகளை மறுதலித்தே வந்துள்ளது. தமிழரின் நியாயபூர்வமான கோரிக்கைகளையும், விடுதலைப் போராட்டத்தையும் மறுதலித்து தெற்கில் பெரும் போராட்டங்களை முன்னெடுத்து இனவாத்தை கக்கிய கட்சி NPP என்கிற JVP என்பதை மறுக்க முடியாது.


தமிழ் மக்களுக்கு எதிரான போராட்டத்திற்கு இராணுவ ஆளணியை பலப்படுத்தி போரை வீரியமடைய வைத்தவர்கள் JVPயினரே அதனால் முள்ளிவாய்க்காலில் இலட்சக் கணக்கில் உயிர்களை பலியெடுத்தது இராணுவம். இவ் வரலாற்றை தவிர்த்துவிட்டுச் செல்ல முடியாது. 


இவ் விடயம் பேசப்பட வேண்டும் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட வேண்டும் வரலாறு. 


நியாயமாக மக்களுக்கான அரசியல் செய்பவர்கள் தமிழ் அரசியல் கட்சிகள் இதனைப் பேசுங்கள் மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள் ஆனால் NPP என்கிற JVP யினரை எதிர்கிறோம் அல்லது எதிர்ப்ப்சியல் செய்கிறோம் என்பதாக சொல்லிக் கொண்டு ஒருவரின் அங்கவீனம் , பேச்சுக் குறைகாடுகளை காவிச் சென்று அரசியல் செய்வதோ அல்லது கிண்டலடிப்பதோ ஏற்றுக் கொள்ளப்பட முடியாது. 


தனிப்பட்ட அங்க, பேச்சுக் குறைபாடுகளை கிண்டலடிப்பது அதனைப் பரப்புவது உடல் அங்கவீனங்களை வைத்து எதிர்ப்பரசியல் செய்பவர்களாக நல்லொழுக்கமுள்ள தனிநபர்கள், அரசியற்செயற்பாட்டாளர்கள், அரசியற் கட்சிகள் , ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மேற்கொள்ளமாட்டார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.